விழிப்புணர்வு சுடர்

விழிப்புணர்வு சுடர்...

கடந்தவை தொடர்ந்து எரிந்தழிய

புத்துணர்வுடன் புத்தம் புதிதாக

இக்கணத்தில் விழித்துக் கொள்


அனைத்தும் எரிந்தழியட்டும்:

பேராசையும் வெறுப்பும்

பொறாமையும் அகங்காரமும்

கோபமும் ஆவேசமும்

வருத்தமும் கவலையும்

எவ்வித தடயமும் இன்றி


பயம் எதற்கு?

அதையும் கடந்து செல்

எதிர்கொண்டு வாழ்ந்து பார்

அது முற்றிலும் எரியட்டும்

எவ்வித பயத்திற்கும் இடமின்றி


அரைமனதுடன் எதற்கு?

முழு மகிழ்வுடன் அனுபவி

முழு மனதுடன் ருசி

அது முற்றிலும் எரியட்டும்

எவ்வித ஏக்கத்திற்கும் இடமின்றி

நடுக்கம் எதற்கு?

வாழ்வை நேரடியாக தொடு - எரிந்தழியட்டும்

நம்பிக்கைகளும் கற்பனைகளும்

தீர்மானங்களும் அபிப்பிராயங்களும்


அச்சம் எதற்கு?

வாழ்வை உள்ளபடி அணுகு - எரிந்தழியட்டும்

ஆணவமும் அகந்தையும்

பற்றுகைகளும் அடையாளங்களும்


அனைத்தும் எரிந்தழியட்டும்...

கபடமற்ற நிர்வாணம் காண்

சிறையிலிருந்து சுதந்திரம் காண்

களங்கமில்லா தூய்மை காண்

அழகுநிறைந்த அன்பை காண்

——

CK. காமராஜ்

18 ஜனவரி 2019 (தமிழ்)

24 நவம்பர் 2018 (English)